பல்துறை திறமையாளரும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் மார்பளவு வெங்கல சிலையை சைதாப்பேட்டை பஜார் தெருவில் தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அருகே திமுக தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.மேலும் இவர், மாணவர்களுக்கான இலவச கணினி பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக பிரதிநிதிகள்,உடன்பிறப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘ தலைவர் கருணாநிதியின் உழைப்பு அவர் ஆற்றிய பணிகளை எடுத்து சொல்ல அவரது சிலைகளை அனைத்து இடங்களிலும் திறந்து வைக்கிறோம் என்றும், மேலும் அவர், இன்றளவும் திமுகவை வழிநடத்துவது கலைஞர்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சியில் இருக்கும் கட்சிதான் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெறும் என்ற வரலாறு இன்று மாறியுள்ளது. அதுபோன்று 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்று பேசினார்.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…