சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி வழக்கு.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டியிட்டார். உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பாமக வேட்பாளர் கசாலி போட்டியிட்டார்.
இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் பாமக வேட்பாளர்களை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி அவர்கள், உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார். அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று அறிவிக்குமாறும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை, ஓரிரு வாரங்களில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…