Muthu Samy [file image]
கோவை : திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள முப்பெரும் விழாவின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது.
ஆம், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. முதலில் கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறவிருந்த இவ்விழா, கொடிசியா மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், 14ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சி 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக முப்பெரும் விழாவுக்கான அரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “மேற்கு மண்டலம் முழுவதும் திமுக கையில் இருப்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”என்றார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…