மருத்துவர் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை – சென்னை மாநகராட்சி

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்து நல்லடக்கம் செய்யப்பட்ட மருத்துவரின் சைமனின் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய சென்ற இடத்தில பொதுமக்கள் இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேறு இடத்திற்கு சென்று மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து கீழ்பாக்கம் கல்லறையில் கணவரின் உடலை மறு அடக்கம் செய்ய கடந்த 22 ஆம் தேதி மருத்துவரின் மனைவி ஆனந்தி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுகாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையில் படி மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. மேலும் மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தியின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

44 minutes ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

1 hour ago

ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…

1 hour ago

திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…

1 hour ago

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

2 hours ago

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 hours ago