இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான், பொதுச்செயலாளர் தான்… இபிஎஸ் பேச்சு!

Published by
பாலா கலியமூர்த்தி

Edappadi Palaniswami: அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் என்று  செயல் வீரர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் களமாக மாறியுள்ளது. இந்த சூழலில், சேலம் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷ்க்கு ஆதரவு அளிக்கும்படி எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் அலை தான் வீசுகிறது. என்னுடைய இந்த நிலைக்கு எடப்பாடி தொகுதி மக்களாகிய நீங்கள் தான் காரணம், நான் உங்களுக்கு கடமை பட்டு உள்ளேன்.

பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் வருவதற்கு காரணமாக இருந்தது அதிமுக. அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட மேட்டூர் அணை உபரி நீர் திட்டப்பணிகளை தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு முடக்கி வைத்துள்ளது என குற்றசாட்டை முன்வைத்த இபிஎஸ், எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை.

இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான், கட்சி பொதுச்செயலாளர் தான். அதிமுகவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் என்றும் சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

45 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

50 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago