தமிழ்நாடு

களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு… அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு குற்றச்சாட்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்படுவதாக அத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதுவரை இல்லாத வகையில் 30 மாதங்களில் இந்து அறநிலையத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கோயபல்ஸ் தத்துவம் போல் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள். திருக்கோயில் சொத்துக்கள் தவறான வழியில் சென்றுவிட கூடாது என்பதற்காக அறநிலையத்துறை தொடங்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்கள் தவறான முறையில் கோயில் சொத்துக்களை பயன்படுத்துவதை தடுக்க தொடங்கப்பட்டது.

1818-ல் தொடங்கி பல்வேறு கட்டங்களில் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் 1951-ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது. திமுக அரசு வந்தவுடன் குறைகளை பதிவிடுக என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டன.  தமிழ்நாட்டில் 48 கோயில்கள் முதுநிலை கோயில்களாக அடையாளம் காணப்பட்டு அங்கு நடைபெறும் அனைத்தும் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. இந்த 48 கோயில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

20 மாவட்டங்களில் மழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

கோயில் அறங்காவலர்கள் நியமனத்தை துரிதப்படுத்த 38 வருவாய் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமித்து நடவடிக்கை எடுத்து திமுக ஆட்சியில் தான். கோயில்கள், பக்தர்களுக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து திமுக அரசு செய்து வருகிறது. அதிகம் பக்தர்கள் கூடும் கோயில்களில் தேவையான பாதுகாப்பு ம்,ஆற்றும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது.

14,000 கோயிகளில் பணியாற்றி வரும் 17,000 அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 5,000 கோயிகளில் திருப்பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோயில் நிர்வாகத்துக்கான மானியம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.  இதுபோன்று சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், காய்ச்ச மரம் தான் கல்லடி படுவது போல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விமர்சனம் உள்ளது. உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதாரமில்லாமல், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்வது சரியல்ல எனவும் அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

9 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

9 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

10 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

11 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

11 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

11 hours ago