தமிழகத்தில் எட்டு வழிச்சாலை,ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதியில்லை என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் சீரமைக்கப்பட்டு,மேலும் 120 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது ,”தமிழகத்தில் உழவர் சந்தைகள் பராமரிப்பின்றி உள்ளன.எனவே,உழவர் சந்தைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு,அவை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.மேலும்,120 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாமல்,தோட்டக்கலைத்துறை சார்பில் 24 செம்மொழி பூங்காக்களும் அமைக்கப்படும்”,என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,”புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.மேலும்,சேலம் 8 வழிச்சாலை திட்டம் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்கப்படாது”,என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…