புற்றுநோயால் இறந்த மூத்த மகன் – தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்!

Published by
Rebekal

மூத்த மகன் புற்றுநோயால் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் தங்களது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 38 வயதுடைய முருகன் என்பவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருபவர். இவரது மனைவி கோகிலா வீட்டில் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இவர்களுக்கும் மதன்குமார், வசந்தகுமார், கார்த்திக் எனும் மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முருகனின் மூத்த மகன் மதன்குமார் சில ஆண்டுகளாக ரத்த புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மதன்குமார் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதன்குமார் இழப்பு குடும்பத்தினருக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்துள்ளது. இருப்பினும் அடுத்த இரு மகன்களை நினைத்து குடும்பம் அழகாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால், முருகன் கோகிலா ஆகிய இருவருக்கும் மூத்த மகனின் நினைப்பு சற்றும் அழிக்கப்படாமல் இருந்ததால் அடிக்கடி மகனின் புகைப்படத்தை செல்போனில் பார்த்துக் கொண்டே இருந்துள்ளனர்.

மகன் இறந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களது மன அழுத்தம் காரணமாக அவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகனுக்கு தம்பதிகள் இருவருமாக சேர்ந்து முடிவெடுத்து டீயில் விஷம் கலந்து கொடுத்து அவர்களை குடிக்க வைத்துள்ளனர். அதன்பின் இருவரும் உயிரிழந்துள்ளனர், பின்னர் அவர்களும் அந்த டீயை குடித்து தாங்களாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் கதவு திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் அவர்கள்  டீயில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மூத்த மகன் இழப்பு தாங்க முடியாமல் மன அழுத்தத்தால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

7 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

19 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago