நாளை முதல் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே..!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர வழக்குகள் மட்டும் நாளை முதல் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் முதல் 3 வாரங்களுக்கு அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்கம் மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.