கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி.! மாணவர்களின் படிப்பு பாதிப்பு.!

- சென்னை அண்ணாசாலையில் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
- கோடை விடுமுறையில் செய்யாமல் இப்ப வெளியேற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் அப்பகுதி மக்கள் புகார்.
சென்னை அண்ணாசாலை தொடக்கத்தில் அமைந்துள்ள காந்தி நகரில் ஆறுகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் இடமாற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோடை விடுமுறையில் வேறு இடத்தில் குடியமர்த்தாமல், தற்போது தங்களை வெளியேற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்து, பள்ளி இடமாறுதல் வசதி உள்ளிட்டவைகளை செய்துத்தர நடவடிக்கை எடுப்பதாக உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025