தி கேரளா ஸ்டோரி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்… ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி.!!

Published by
பால முருகன்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில்,படத்தை வெளியிட கூடாது என பலதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வந்தது. ஆனால், படம் கடந்த  5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து படம் வெளியாகியுள்ள நிலையில், பலரும் படத்தை தடை செய்யவேண்டும் என்றும், பலரும் படத்திற்கு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தற்போது தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கேரளா ஸ்டோரி படம் பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய  தமிழிசை செளந்தரராஜன்  “இந்த கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என்று நினைக்கிறேன் படம் ஐஎஸ்ஐஎஸ் எதிராக இது சித்தரிக்கப்படுகிறது.

எனவே அதற்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு எதிரானது என்று நினைப்பார்கள்.  தீவிரவாதத்திற்கு எதிரானது என்று நினைத்தால் நமக்கு ஆதரவான படம் என்று நினைப்பார்கள் அது அவரவர்களின் மன நிலையை பொறுத்தது.

பிரதமர் மோடி சொன்னது போல தீவிரவாதம் எந்த இடத்தில், எந்த ரூபத்தில் வந்தாலும் அது ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று.  ’தி கேரளா ஸ்டோரி’ படம் பெண்களையும், இளைஞர்களையும் பாதிக்கும் வகையில் இருந்தால் அதன் உண்மை தன்மையை அறிய வேண்டும். தீவிரவாதத்தைப் பற்றி கேரளாவில் சட்டமன்றத்திலேயே பேசப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு வேண்டிய கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம். ஆனால், சொல்ல வேண்டிய கருத்தை வைத்து எடுத்தால் கருத்து சுதந்திரம் கிடையாது உடனே தடை செய்வீர்கள்.  எல்லாரும் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் நாங்க எல்லாம் பார்க்க போகிறோம். ஆக உண்மை தன்மை எங்கு இருந்தாலும் அதனை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

4 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

5 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

6 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

6 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

7 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

8 hours ago