இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 3,998 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி.! 10 தொகுதிகளில் ஒற்றை இலக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டப்பேரவை தேர்தலில் 3,998 பேர் போட்டியிடுகிறார் என்று இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று 19ம் தேதி நிறைவடைந்தது. இதில் 7,000கும் மேற்பட்ட வேட்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மார்ச் 20ம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள், மாற்று வேட்பாளர்கள் ஆகியோர் மார்ச் 22ம் தேதி தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஆண் வேட்பாளர்கள் 3,585 பேர், பெண் வேட்பாளர்கள் 411, மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் சட்டபேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,255 மனுக்களில் 4,442 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கரூர் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சென்னை ஆர்.கே.நகரில் 31 பேரும், சைதாப்பேட்டையில் 30 பேரும் போட்டியிட உள்ளனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஒற்றை இலக்கத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 207 பேர் போட்டியிடுகின்றனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

46 minutes ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

1 hour ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

2 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

2 hours ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

3 hours ago