வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு காரணமாக 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FloodAlert

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மற்றும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக இப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், மொத்தம் 3 மாவட்டங்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

அதே சமயம், தொடர் மழை காரணமாக இப்பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பதிவாகி வருவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக மே 16 முதல் 19 வரை மழை தொடர்ந்து பெய்து வருவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. பொதுமக்கள் தாழ்வான பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டும் என்றும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்