கட்டாய திருமணத்தை எதிர்த்து நேரடியக காவல் நிலையத்துக்கு புகார் மனுவுடன் சென்ற சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது கொண்ட சிறுமி ஒருவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது தாத்தா பாட்டி 28 வயது நிறைந்த இளைஞன் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதற்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார், இருப்பினும் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு மலையடிவார கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி மணமகனை கட்டி கொள்ளும்படி அதட்டப்பட்டுள்ளார். வெளியேற முயன்ற சிறுமி இது சரிப்படாது என்பதை நினைவில் கொண்டு துணிச்சலாக மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி அவர்களிடம் சென்று புகார் அளித்துள்ளார். பின் வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு சென்ற சிறுமி நேரடியாக காவல் நிலையத்துக்கு சென்று தனக்கு நடந்த கொடூரமான அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
பின்பும் எவ்வாறு உனக்கு இப்படிப்பட்ட துணிச்சல் வந்தது என்று காவல் நிலையத்தில் பாராட்டுடன் கேள்வி கேட்கப்பட்டதற்கு எங்களது பள்ளியில் இதுபோன்ற ஒரு விழிப்புணர்வு நாடகத்தை நான் பார்த்திருக்கிறேன். எந்தவொரு அநீதியான புகாரையும் துணிச்சலாக மேற்கொள்ளலாம் என்று அதன் கருத்து இருந்தது. அதனால்தான் எனக்கு இந்த தைரியம் வந்தது, என்று தனது வீரம் வந்த கதையையும் பிடிப்பில்லாத திருமணத்தையும் பற்றிக் கூறவே போலீசார்கள் உடனடியாக மாணவிக்கு நீதி வழங்க செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…