முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.

கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், சமீபத்தில் திடீரென அவரது பணியில் இருந்து விலகி, சில மாதங்களுக்கு விவசாயத்தில் களமிறங்க உள்ளேன் என தெரிவித்தார். இதனிடையே, ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசிவந்ததால் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது.

இனையடுத்து, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அப்போது, தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இருந்தனர். பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னாலான முயற்ச்சியை செய்வேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

20 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

43 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago