இலவச முகக்கவசங்கள், ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் மறுபயன்பாடு செய்யக்கூடிய இலவச முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று காலை துவங்கி வைத்துள்ளார்.
அரசால் வழங்கப்படும் முகக்கவசங்கள் காதுகளில் மாட்டாமல், தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முகக்கவசத்தை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில், இந்த முகக்கவசங்கள் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மேலும் இந்த முகக்கவசம் வழங்கும் டோக்கன்கள், ஆகஸ்ட் மாதம் 1, 3, 4 ஆகிய தேதிகளில் வீடு வீடுகளாக சென்று வழங்கப்படும் எனவும், டோக்கன்களை கொண்டுச்சென்று முகக்கவசங்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…