தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகே பொதுத்தேர்வு – அமைச்சர்

Minister Senkottayan has said that the general election schedule will be released after the announcement of the election date.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்பே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சத்தியமங்கலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்பே பள்ளி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தடை நீக்கப்பட்டு மலைப்பகுதியில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையே, வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். பொதுத் தேர்வு சிறப்பு வகுப்புக்கு முதல்வர் பழனிசாமி ஒப்புதல் வழங்கியவுடன் இதுகுறித்த அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.