மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை விட்ட பொதுச்செயலாளர் சசிகலா.!

Published by
பாலா கலியமூர்த்தி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா.

இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினத்தை சென்னை தி நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து சசிகலா ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அச்சமயம் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி புரட்சித் தலைவி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சசிகலா ஆவார்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக கொடி மீண்டும் பயன்படுத்தியிருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்று போடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய போது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தனர். மேலும் சசிகலா, தினகரனை ஒருபோதும் அதிமுகவில் இணைத்து கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் பொதுச்செயலாளர் மற்றும் கொடியை பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

4 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

4 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

5 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

5 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

8 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

8 hours ago