மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை விட்ட பொதுச்செயலாளர் சசிகலா.!

Published by
பாலா கலியமூர்த்தி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா.

இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினத்தை சென்னை தி நகரில் உள்ள இல்லத்திலேயே இருந்து சசிகலா ஜெயலலிதா படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் 100 ஆண்டுகளுக்கு நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் அதிமுக கொடியை பயன்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அச்சமயம் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கி புரட்சித் தலைவி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சசிகலா ஆவார்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக கொடி மீண்டும் பயன்படுத்தியிருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்று போடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய போது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தனர். மேலும் சசிகலா, தினகரனை ஒருபோதும் அதிமுகவில் இணைத்து கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் பொதுச்செயலாளர் மற்றும் கொடியை பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

46 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

1 hour ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

13 hours ago