திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு மாபெரும் வெற்றியை பதிவு செய்து, கடந்த மே-7 ஆம் தேதியன்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100-வது நாளை இன்று எட்டியுள்ளது. இதற்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கொண்டாடி முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேர்மையான அதிகாரிகளை நியமித்து 100 நாட்களாக நல்ல முறையில் ஆட்சி நடக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் ஆட்சியை பாராட்டு தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியின் செல்பாடுகள் குறித்து ஆறு மாதங்கள் பிறகுதான் முழுமையாக பேச முடியும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியது எனவும் கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் 75வது சுதந்திர தின பாஜக லோகோவை வெளியிட்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…