தவறான வழியிலும் சட்டத்திற்கு புறம்பாகவும் எஸ்பி வேலுமணி செயல்பட்டுள்ளார் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது. வேலுமணி மீதான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில், எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
வழக்கை இழுத்தடிற்பதற்காக மேல்முறையீட்டு மனுவை எஸ்பி வேலுமணி தாக்கல் செய்துள்ளார் என்றும் தவறான வழியிலும் சட்டத்திற்கு புறம்பாகவும் எஸ்பி வேலுமணி செயல்பட்டுள்ளார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு குறித்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை மாநகராட்சியில் ரூ.114 கோடி மதிப்பு ஒப்பந்தம் பணியில் ரூ.29 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவையில் குப்பைகளை அகற்றுவது தொடர்பான ஒப்பந்தங்களில் ரூ.25 கோடி ஏற்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. 2016-20-ஆம் ஆண்டு வரை எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. 2021-ல் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையின்படி வேலுமணிக்கு எதிராக முதல் தகவல் பதிவு செய்யபட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் காணொளி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் நேரடி விசாரணை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…