MDMK Leader Vaiko [Image source : BCCL]
ஆளுநர் பதவியே இருக்கக்கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து.
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா இன்று தொடங்கியது. இன்று முதல் ஒருமாதம் கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசு தலைவரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளனர். வைகோ தலைமையிலான கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆளுநர் ஆர்.என்.ரவி தான். ஆளுநர் பதவியே இருக்கக்கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட்டால்தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். முதல்வரின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. அமைச்சர்கள் நியமனம், இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரமாகும் எனவும் தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…