கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுள்ளார். அப்பொழுது சிறுமியின் வயிற்றில் ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது உடலில் கட்டி போன்ற ஒரு வடிவம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து, சிறுமிக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சிறுமியின் வயிற்றில் மருத்துவர் கோகுல் கிருபா தலைமையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொழுது, சிறுமியின் வயிற்றில் அரை கிலோ எடையில் தலை முடியும், ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட சில பொருட்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவகுழுவினர் அவற்றை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…