மண்டபம் : 8 கோடி மதிப்புள்ள 2000 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்...!

The Coast Guard has seized 2000 kg of sea cards worth about Rs 8 crore in the hall.

மண்டபத்தில் சுமார் 8 கோடி மதிப்புள்ள 2000 கிலோ கடல் அட்டைகள் கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மண்டபம் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரையில் 15 கிலோமீட்டர் தொலைவில் ஆள் இல்லாமல் ஒரு படகு ஒன்று நங்கூரமிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்திற்கிடமாக இருந்த இந்தப் படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றி சோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை அதாவது கடல் வெள்ளரி 2000 கிலோ அளவுக்கு இருந்துள்ளது. இது சுமார் 8 கோடிக்கும் மேல் மதிப்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கடல் வெள்ளரி அனைத்தையும் கைப்பற்றிய கடலோர காவல் படையினர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.