அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் – முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

கொரோனாவுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,  தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தளர்வறியா உழைப்பினால் இந்திய அளவில் தமிழகத்தை எப்போதும் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

இதுபோன்று, கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தொழிலாளர்கள் தினம் வாழ்த்துகள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் கேடயமாகவும், போர்வாளாகவும் திமுக எப்போதும் இருக்கும் என தெரிவித்தார். புதிதாக அமையப்போகும் திமுக ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றவோம், விரோத நடவடிக்கைகளை கைவிட்டு, தொழிலாளர்களின் வாழ்கை தரம் உயர்த்திடவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago