கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? -அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

Published by
Edison

தமிழகத்தில் கல்லூரிகளில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.மேலும், இதன்காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இதனையடுத்து,இன்று கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்,ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: “சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து 12 வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு விடும்,அதற்கு பிறகுதான் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.ஆனால்,சில தனியார் கல்லூரிகள் அரசின் அறிவிப்புக்கு முன்னரே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. அவ்வாறு செய்யக்கூடாது.மேலும்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது”,என்று தெரிவித்தார்.

Published by
Edison

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago