நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் – கவுசல்யா.!

கடந்த 2015-ம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில், சங்கா் உயிாிழந்தாா். சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம், கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. மேலும், 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கௌசல்யா உடுமலை சங்கர் கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
என் தந்தையின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளேன். நீதிகிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன் எனது சட்டப் போராட்டம் தொடரும் என கவுசல்யா தெரிவித்தார்.