INDIA to BHARAT: இந்த நாடு எங்கே போய் நிற்கும் என தெரியவில்லை – அமைச்சர் துரைமுருகன்

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த நாட்டில் தற்போது என்னென்னமோ நடந்து வருகிறது. திடீரென நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட போகிறது என்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மாதம், ஒரே ஆட்சி, ஒரே பிரதமர் மற்றும் நாட்டின் பெயர் பாரத் என கூறுகிறார்கள்.

இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?.. நாடு எங்கே போய் நிற்கும் என தெரியவில்லை. நாடு எங்கேயோ போகிறது, எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை சட்டமன்றத்தை கலைத்துவிட்டு அமெரிக்க அதிபர் போல் மோடி வர விரும்புகிறாரோ? என தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.

இந்த நாடு யாருடைய சொந்தமும் அல்ல, நாட்டின் பெயரை மாற்றலாம் தவறு இல்லை, ஆனால் அதனால் என்ன பலன் இருக்கு, எதற்காக மாற்ற வேண்டும். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இந்தியா என்று தான் கூறி வருகிறோம். இப்போது திடீரென மாற்றுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றினோம். ஏனென்றால், இந்து தமிழ் பேசும் தேசம், கலாச்சாரம் என பல்வேறு வரலாறுகள் இங்கு உள்ளது. ஆனால், பாரத்துக்கு என்ன உள்ளது. எனவே, குறுகிய மனப்பான்மை உடையவர்களிடம் ஆட்சி கிடைத்துவிட்டதால் நாடு படாதப்பாடுபடுகிறது என்றார். மேலும், இந்த மண்ணில் பிறந்தவர்களை எப்படி சிறும்பான்மையினர் என்று சொல்வது? கேள்வி எழுப்பிய அமைச்சர், சிறுபான்மையினருக்கு எப்போது ஆபத்து வந்தாலும் திமுக உடனே வந்து நிற்கும் எனவும் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

8 minutes ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

52 minutes ago

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…

2 hours ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழா : விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…

3 hours ago

அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…

3 hours ago

வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்…பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…

4 hours ago