நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் மெரினா கடற்கரை, சாந்தோம், அடையார், பட்டினப்பாக்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
புதுச்சேரி வடக்கே நிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடந்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. கடலூரில் இருந்து 40 கி.மீ, சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் கரையை கடக்கிறது நிவர் புயல்.
இந்த புயல் தற்போது 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதிதீவிர புயலான நிவர்-ன் மையப்பகுதி கரையை கடந்து வருவதால், கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூரில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 22.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி 18.7 செ.மீ., சென்னை 8.9 செ.மீ., காரைக்கால் 8.4 செ.மீ., நாகையில் 6.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருவதால், கடலூர் மற்றும் புதுச்சேரி சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…