நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் மெரினா கடற்கரை, சாந்தோம், அடையார், பட்டினப்பாக்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
புதுச்சேரி வடக்கே நிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடந்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. கடலூரில் இருந்து 40 கி.மீ, சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் கரையை கடக்கிறது நிவர் புயல்.
இந்த புயல் தற்போது 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதிதீவிர புயலான நிவர்-ன் மையப்பகுதி கரையை கடந்து வருவதால், கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூரில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 22.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி 18.7 செ.மீ., சென்னை 8.9 செ.மீ., காரைக்கால் 8.4 செ.மீ., நாகையில் 6.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருவதால், கடலூர் மற்றும் புதுச்சேரி சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…