“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

ராஜ கண்ணப்பன் பதவி விலக வேண்டும் என நீலகிரி கூடலூரில் 500 பேர் கொண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Raja Kannappan

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா – மோனிகா தேவி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் தங்கி இருந்து அந்த தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்து வந்தனர். கடந்த ஜூன் 20-ஆம் தேதி மோனிகா தேவி மூத்த மகள் ரோஷினி (வயது 7) உடன் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, மோனிகா தேவி தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டிற்குள் சென்ற நிலையில், அவருடைய மகள் ரோஷினி அங்கே இருந்தார். அந்த சமயம் அம்மா அம்மா என்ற அலறம் சத்தம் கேட்க உடனே தாய் மோனிகா தேவி வெளியே வந்து பார்த்த பொது ரோஷினியை சிறுத்தை ஒன்று கடித்து இழுத்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தினார். உடனே அக்கம் பக்கத்தினர் வேகமாக வந்து சிறுமியை தேடிய நிலையில் சிறுமி கிடைக்கவில்லை.

பிறகு வனத்துறையினர் சிறுமியின் உடலை தேடி அதற்கு அடுத்த நாளான ஜூன் 21-ஆம் தேதி சிறுமியின் உடலை மீட்டனர்.  இந்த சம்பவம் தீராத ஒரு சோகமான சம்பவமாக இருந்து வரும் சூழலில், இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வனம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அலட்சியமாக பேசியது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர் ” மனிதர்களை மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான்.

யானைகள் தாக்குவது மிருகங்கள் தாக்குவது என்பதெல்லாம் இயல்பாகவே நடக்க கூடிய ஒரு விஷயம் தான். அப்படி நடந்த பிறகு அரசாங்கம் அதற்கு உடனடியகவே நடவடிக்கைகளையும் எடுக்கிறது. அதே போல வனத்துறையும் உடனடியாகவே நடவடிக்கை எடுக்கிறது.  எனவே இது அன்றாடம் நடக்க கூடிய விஷயம் அரசாங்கம் செய்யும் வேலை இல்லை. இருங்தாலும் இப்படியான சம்பவங்கள் நடந்த உடன் அதற்காக நடவடிக்கை அரசு எடுக்கிறது உடனடியாக நிவாரணமும் வழங்குகிறது” என கூறியிருந்தார்.

இவர் பேசியதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவருடைய பேச்சுக்கு எதிர்ப்புகளும் குவிய தொடங்கியது. இப்படி பட்ட கேள்விக்கு இப்படியா அலட்சியமாக பதில் சொல்வீர்கள்? என காட்டத்துடன் கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள். கண்டனம் ஒரு பக்கம் எழுந்த நிலையில், அவர் பதிவு விலகவேண்டும் என ஆர்ப்பாட்டமும் சில இடங்களில் நடந்து வருகிறது. நீலகிரி கூடலூரில் 500 பேர் கொண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்