தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வரும் 10ம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி நாளன்று,பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும், சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும்,ஊர்வலமாக சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக,இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.மேலும், தடையை மீறி விநாயகர் சதுர்த்தி பண்டிகை பொது இடங்களில் கொண்டாடப்படும் என்றும் அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டு வருகின்றது.அந்த வகையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்து அட்டை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல, இளைஞர்களே! இதை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.ஏனெனில்,சிறுபான்மை மக்களிடம் பாஜக பற்றி ஒரு சந்தேகத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பது உண்மைதான்.அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு உள்ளது என்று டாக்டர்.கலைஞர் அவர்கள் பேசியது 23.06.1999 அன்று முரசொலி நாளிதழில் வந்துள்ளது.
முத்தமிழ் அறிஞரின் புதல்வருக்கு, தமிழக முதல்வருக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…