பெண்கள் நல்வாழ்விற்கான 7 செயல்திட்டங்களை அறிவித்த கமல்..!

Published by
murugan

மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெண்கள் நல்வாழ்விற்கான 7 செயல்திட்டங்களை அறிவித்துள்ளனர். அதில்,

1. சீருடைப் பணியில் 50% பெண்கள்:
அரசு சேவையில் இருக்கும் ஒவ்வொரு சீருடைத்துறையிலும் 50% பெண்கள்  பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படும்.

2.துன்பத்தில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு:
துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கென்றே அவசரகால இலவச விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவதுடன், 181 பெண்கள் உதவி எண்ணில் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கும் செயல்முறை நிறுவப்படும்.

3. பெண்களுக்கான தயாரிப்புகளின் பொது விநியோகம்:
பெண்களுக்கான சுகாதார நாப்கின்களை அரசாங்கமே கொள்முதல் செய்து, கிராமம் மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்கள் மற்றும் இளம்பருவ பெண் குழந்தைகளுக்கு பொது விநியோக முறையில் வழங்கப்படும்.

4.பெண்களுக்கான மாவட்ட அளவிலான மகளிர் வங்கி:
பெண்களால்… பெண்களுக்காக… பெண்களுக்கென்று இயங்கும் மகளிர் வங்கி உருவாக்கப்படும்.

5. ஒற்றை தாய்மார்களுக்கான ஆதரவின் குடை:
கல்வி, வேலை, திறன் மேம்பாடு, மற்றும் சமூக பொருளாதார ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

6.சிறப்பு பராமரிப்பு கட்டமைப்புகள்:
அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வழங்குவதை உறுதி செய்தல் (பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் போன்றவை..)

7.இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனைகள் :
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறையாவது அனைத்து பெண்களுக்கும் இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்யும்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago