அமைச்சர் கந்தசாமி தலைமையில் கிரண்பேடியை எதிர்த்து காங் எம்.எல்.ஏக்கள் தர்ணா…!

Published by
லீனா

கொரோனோ பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் உள்ள சிவப்பு அட்டைதாரர்கள் அதாவது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.   ஆனால், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படவில்லை.
இதனையடுத்து, அனைத்து பிரிவு மக்களுக்கும் இந்த அரிசியை வழங்கிடக் கோரி, அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் சட்டமன்ற படிக்கட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பாஜக எம்எல்ஏ சாமிநாதன்,என் ஆர்.காங் எம்எல்ஏக்கள் செல்வம், ஜெயபால், சுகுமாறன்இந்த போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் இரண்டு மணி நேரமாக நீடித்த நிலையில் அவர்கள் சட்டமன்ற கதவை மறித்து அமர்ந்தனர். அப்போது தலைமை செயலர், காவல் துறை தலைவர் ஆகியோர் முதல்வருடன் ஆலோசனை நடத்தி விட்டு வந்த நடந்தே வெளியே சென்றனர்.
இதனிடையே சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்த குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி, காங் எம்.எல்.ஏக்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் ஆளுநர் மாளிகை நோக்கி நடந்து வந்தனர். ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்ற அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து, அரிசி வழங்க துணைநிலை ஆளுநர் தடையாக உள்ளதாக கூறி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி,அரசு கொறடா அனந்தராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி ஆகியோர் ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் கோப்பிற்கு அனுமதி அளிக்கும் வரை தர்ணாவை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago