சீர்காழி இரட்டை கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட கருணாராம் கைது..!

Police have arrested Karunaram, the mastermind of the double murder case in Sirkali this morning, in Kumbakonam.

சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். இன்று அதிகாலை தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும், தன்ராஜின் காரையும் திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, 3 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடன் இருந்த 2 நகை பைகளில் ஒரு பையை வயலில் வீசியதால் அதை எடுக்க சென்றபோது, 3 பேரில் ஒருவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

இந்நிலையில், சீர்காழியில் இன்று காலை நடந்த இரட்டைக் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட கருணாராம் என்பவரை போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர். தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் ஆகியோரை கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.