கேரள மாநிலத்தில் தேர்வெழுதும் மாணவி ஒருவருக்காக, 70 பேர் பயணிக்கக்கூடிய படகு இயக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவள் சென்று வர ரூ.18 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் கரிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மாணவி சண்டிரா பாபு. 17 வயதற்காகும் இவர், ஆலப்புலா எம்.என். பிளாக். SNDP பள்ளியில் +1 தேர்வினை எழுதவிருந்தார். அங்கு படகில் செல்ல அரைமணிநேரம் ஆகும். தனிப்படகில் பயணித்தால் ரூ.4000 வரை செலவாகும் என தெரிவித்தார்.
ஆனால் அவள் வீட்டில் அந்தளவு வசதி இல்லாத நிலையில், மாநில நீர்வழிப் போக்குவரத்து துறையை அணுகினார். தான் பரிட்சை எழுத வேண்டும் எனவும், பள்ளிக்கு போய்வர டிக்கெட் கட்டணமாக ₹18 மட்டுமே தர முடியும் எனவும், தனக்காக போட் சர்வீஸ் நடத்த முடியுமா? என கேட்டார். இந்த விஷயம், அம்மாநில மந்திரி வரை போனது.
இந்நிலையில், அந்த மாணவி தேர்வு எழுத 70 பேர் பயணிக்கும் வகையிலான படகு சர்வீஸ் இயக்கப்பட்டது. அந்த படகு, காலை 11.30 கிளம்பி, மாணவியை பள்ளி வாசலுக்கு அருகில் 12.00 மணிக்கு இறங்கிவிடும். மேலும், அந்த மாணவிக்காக அங்கேயே காத்திருந்து மாலை 4 மணிக்கு அவளை தனது வீட்டிற்க்கே அழைத்து சென்றது.
அதுமட்டுமின்றி, அந்த மாணவி சென்றுவர மொத்தமாக ரூ.18 மட்டுமே வசூலிக்கப்பட்டது. மேலும், அந்த மாணவி சென்ற படகை இயக்க 5 தொழிலாளர்கள் பணிபுரிந்தது கூறிப்பிடத்தக்கது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…