ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை 1000 படுக்கைகளை கொண்டதாக தரம் உயர்த்த வலியுறுத்தி கடிதம்- ரவிக்குமார் எம். பி.!

Published by
Ragi

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் பல வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை  1000 படுக்கைகளை கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினரான ரவிகுமார் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் ஒன்று ஜிப்மர் மருத்துவமனை. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 250 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு மட்டும் உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் இந்த மருத்துவமனையில் விழுப்புரம் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனாவால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க மருத்துமனையால் முடியவில்லை என்று திணறி வருவதாகவும் கூறியுள்ளார்.

எனவே ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் உள்ள படுக்கைகளை 1000 ஆக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும் இந்த மருத்துவமனை கொரோனா பரிசோதனை நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனையும் ஒரு நாளில் 1000 பேருக்கு பரிசோதனை செய்யும் விதமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

28 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago