கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் பல வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை 1000 படுக்கைகளை கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினரான ரவிகுமார் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் ஒன்று ஜிப்மர் மருத்துவமனை. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 250 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு மட்டும் உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் இந்த மருத்துவமனையில் விழுப்புரம் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனாவால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க மருத்துமனையால் முடியவில்லை என்று திணறி வருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் உள்ள படுக்கைகளை 1000 ஆக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும் இந்த மருத்துவமனை கொரோனா பரிசோதனை நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனையும் ஒரு நாளில் 1000 பேருக்கு பரிசோதனை செய்யும் விதமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…