குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல்..!

Published by
murugan

தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால், திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன்காரணமாக வரும் 7-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

  • தியாகராயநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை விட 137 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றி.
  • மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை விட 281 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி.
  • தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி.
  • மேட்டூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சீனிவாச பெருமாளை விட 656 வாக்குகள் அதிகமாக பெற்று பாமக வேட்பாளர் சதாசிவம் வெற்றி.
  • காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.ராமுவை விட 746 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் துரைமுருகன் வெற்றி.
  • கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட 794 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர்  அசோக் குமார் வெற்றி.
  • விருதாச்சலம் தொகுதியில் பாமக வேட்பாளர் கார்த்திகேயனை விட 862 வாக்குக்கள் அதிகமாக பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி.
  • நெய்வேலி தொகுதியில் பாமக வேட்பாளர் ஜெகனை விட 977 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் சுபா ராஜேந்திரன் வெற்றி .
  • ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணியை விட 1091 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் தேவராஜி வெற்றி.
  • கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் குறிஞ்சிபிரபாகரனைவிட 1095 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் தாமோதரன் வெற்றி.
  • அந்தியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சண்முகவேலை விட 1275 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் வெற்றி.
  • திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.கே.வைரமுத்துவை விட 1382 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி.
  • தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை விட 1393 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் கயல்விழி வெற்றி.
  • உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சோமசுந்திரத்தை விட 1622 வாக்குகள் அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் சுந்தர் வெற்றி.
  • பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் வரதராஜனைவிட 1725 வாக்குகள் அதிகமாக பெற்று அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி.
  • கோவை தெற்க்கு தொகுதியில் மநீம வேட்பாளர் கமல்ஹாசனை விட 1728 வக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி.
  • கூடலூர் தொகுதியில்  திமுக வேட்பாளர் காசிலிங்கத்தை விட 1945 வாக்குகள் அதிகமாக அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன் வெற்றி.
  • திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளர் ஆறுமுகத்தை விட 1947 வாக்குகள் அதிகமாக பெற்று விசிக வேட்பாளர் பாலாஜி வெற்றி.
  • ராசிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை விட 1952 வாக்குகள்அதிகமாக பெற்று திமுக வேட்பாளர் மதிவேந்தன் வெற்றி.
  • மயிலம் தொகுதியில் திமுக வேட்பாளர் மாசிலாமணியை விட 2230 வாக்குகள் அதிகமாக பெற்று பாமக வேட்பாளர் சிவக்குமார் வெற்றி.

Published by
murugan

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

9 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

9 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

10 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

10 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

11 hours ago