தமிழக, கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடியில் திருமணம் செய்துகொண்ட மணமக்கள்.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ரத்னம் மகன் பிரசாந்த் (25) இவருக்கும், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் காயத்ரி (19) என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் நடைபெற இருந்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மகணமகன் இ.பாஸ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை, மணமகனுக்கு இ.பாஸ் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழக, கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடிக்கு திருமணக்கோலத்தில் மணமக்கள் வந்தனர். இதனைப்பார்த்து, இருமாநில போலீஸ் விசாரித்தனர். இ.பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என கேரள போலீசார் மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த முகூர்த்த நேரத்தில் இருவீட்டினர் முன்னிலையில் சோதனைச்சாவடி அருகே திருமணம் செய்துகொண்டனர். எல்லைப்பகுதியில் இருந்த இருமாநில காவல்துறையினர், வருவாய்துறையினர் மணமக்களை வாழ்த்தினர். இ.பாஸ் இல்லாத காரணத்தால் மணப்பெண் கேரளாவிற்கும், மணமகன் கம்பத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…