நெல்லை:தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்றின் தாக்கம் சற்று குறைந்த பிறகு,கடந்த சில மாதங்களாகவே பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டன.மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
நெல்லையில் பள்ளி கட்டடம் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான பள்ளியை நேற்று அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.அப்போது,பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை குறித்து பேசுகையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 25 முதல்(நாளை) முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும்,மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவு அமைக்கவும்,பள்ளிகளில் இடைவெளியின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…