பள்ளி மாணவனுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்.. கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அமைச்சர் PTR..!

Published by
கெளதம்

மதுரை : கடந்த 11 மாதங்களாக விஷ்வா என்கிற மணவனை தொடர்ந்து கண்காணித்து வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போது அவரை சர்பிரைஸ் செய்துள்ளார். அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைப்பற்காக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றிருந்தார்.

அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே 7ஆம் வகுப்பு மாணவன் விஷ்வா, “மயக்கம் வருகிறது” என்று கண்ணை மூடினார். அதை கவனித்த அமைச்சர், அந்த மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும் மாணவன் வீட்டுக்கு குழந்தை நல மருத்துவர் மற்றும் டயட்டிசியன்களை அனுப்பி வைத்து பரிசோதனை செய்ய வலியுறுத்தினார். ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரு நாள் விஷ்வாவை தனது இல்லத்துக்கு அழைத்து உரையாடினார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அப்போது விஷ்வா, விளையாட்டாக சைக்கிள் வேண்டுமென கேட்டுள்ளார். உடனே அமைச்சர், “உனது உடல் எடை வெறும் 23 கிலோ மட்டுமே உள்ளது. சைக்கிள் ஓட்ட பலம் வேண்டாமா? 30 கிலோவாக எடையை உயர்த்திக் கொண்டு வா. உனக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன்” எனக் கூறி அனுப்பிவைத்துள்ளார்.

அன்று முதல் கடந்த 11 மாதங்களாக மாணவனுக்கு பழங்கள், மருந்துகள், ஊட்டச்சத்து பானங்களை வழங்கி பராமரித்து வந்துள்ளார். மேலும் வாரம்தோறும் விஷ்வா தனது எடையை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதனை பாலோ செய்த் வந்த மாணவன் விஷ்வா தற்பொழுது 30 கிலோ எடையை எட்டியதால், அவருக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சர்பிரைஸ் செய்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago