ஆட்சி அதிகாரம் வைத்துள்ள அமைச்சர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 4-ஆம் தேதி சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.இதன் பின் நேற்றும் திரிபாதி அலுவகத்திற்கு சென்ற, அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டவர்கள் சசிகலா மீது மீண்டும் புகார் அளித்தனர்.நேற்று சசிகலா பெங்களூரில் இருந்து வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து இரண்டு முறை புகார் அளித்தனர்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சசிகலா அவர்கள் 4 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை நோக்கி வருகிறார்கள்.தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் வரவேற்க காத்திருக்கிறார்கள்.சசிகலாவை வரவேற்பதை தவிர வேறு எண்ணம் எங்களுக்கு கிடையாது.ஆனால் ஏன் பயப்படுகிறார்கள் இவர்கள் ,ஆட்சி அதிகாரம் கையில் உள்ளது. ஆட்சி அதிகாரம் வைத்துள்ள அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு இரண்டு நாட்ளாக கட்டியிருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் ஓடுகிறார்கள். என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள்.இதெல்லாம் பார்க்கும்போது ,இவ்வளது தரம் தாழ்ந்து போய் இருக்கிறார்கள் என்ற வருத்தம் தான் உள்ளது.சதி திட்டம் தீட்டுகிறார்களோ என்ற ஐயப்பாடு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…