வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் பேசி அமைச்சர்கள், தற்போது முதல்வருடன் சந்தித்து பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் சமீபத்தில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் 3-ஆம் தேதி(அதாவது) பேச்சுவார்த்தை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்தப் பேச்சு வார்த்தை முடிவைப் பொறுத்து நிர்வாகக் குழுவை மீண்டும் கூட்டி அரசியல் முடிவை எடுப்பது என்றும் பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் வன்னியர்களுக்கு 20% உள் இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் பாமக தலைவர் ஜிகே மணி, ஏகே மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் பேசி அமைச்சர்கள், தற்போது முதல்வருடன் சந்தித்து பேசி வருகின்றனர். பாமக கோரிக்கை தொடர்பாக அமைச்சர் தங்கமணி, வேலுமணி சி.வி சண்முகம் ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…