டெல்லியில் திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் சோனியா காந்தி, பா.சிதம்பரம், வைகோ, பரூக் அப்துல்லா, டி ராஜா, திருநாவுக்கரசர், கபில் சிபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தில் கட்சிக் கொடியை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஏற்றி வைத்தார். டெல்லி திமுக அலுவலகத்தில் குத்துவிளக்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றி வைத்தார்.
டெல்லி அண்ணா -கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா சிலையை துரைமுருகனும், கலைஞர் சிலையை டி.ஆர்.பாலு திறந்து வைத்தனர். பேராசிரியர் அன்பழகன் நூலகத்தை சோனியா காந்தி திறந்துவைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…