கஜா புயலின்போது மக்கள் எதிர்ப்பால் சுவர் ஏறி குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ.எஸ் மணியன் என ஸ்டாலின் தெரிவித்தார்.
நகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். வேதாரண்யம் – வேதரத்தினம் , நாகை – ஆளூர் ஷாநவாஸ் , கீழ்வேளூர் -மாலிக் ஆகியோருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், பணம் என்றால் ஓ.எஸ்.மணியன்; பணம் இல்லேன்னா நோ.எஸ்.மணியன். கஜா புயலின்போது மக்கள் எதிர்ப்பால் சுவர் ஏறி குதித்து ஓடியவர் அமைச்சர் ஓ.எஸ் மணியன் என தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணம் வழங்கவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கவலை இல்லை. பிரதமர் மோடி இனையம் துறைமுகம் கொண்டு வருவோம் என்கிறார். இனையம் துறைமுகம் திட்டத்தை கொண்டு வரவில்லை என முதலமைச்சர் சொல்லுகிறார். துறைமுகம் விவகாரத்தில் மீனவர்களை பிரதமர், முதலமைச்சர் ஏமாற்றுகின்றனர் என குற்றச்சாட்டினார்.
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…