[file image]
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் புயலாக உருவெடுத்துள்ளது. இந்த மிக்ஜாம் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில் இருக்கும் மிக்ஜாம் புயல், நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை முற்பகலில் தீவிர புயலாக கரையை கடக்கிறது.
அதன்படி, மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் காற்று இன்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த புயல் எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் எதிரொலி… சென்னையில் 20 விமானங்கள் ரத்து!
புயல் மற்றும் கனமழை காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.
சென்னையில் 24 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், குறிப்பாக 6,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு துரையின் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், கப்புயல் மற்றும் கனமழை பாதிக்கும் நிலை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவம் இடத்திற்கு சென்று மரங்கள் மற்றும் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…