முக்கியச் செய்திகள்

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

Published by
பால முருகன்

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது எனவும், சமீபகாலமாக கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் .

அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறார். அவரை போன்று டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூற மாட்டேன் புள்ளிவிவரங்களுடன் சட்டசபையில் தெரியப்படுத்துவேன்.  கடந்த 2024’ல் மட்டும் 4,571 சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எங்கேயாவது குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பின் மேற்கொள்ளப்படும் துரித சம்பவங்கள் ஒருபுறம், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என இருவழியிலும் காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. தொடர் குற்றவாளிகள், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைதுகள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதைப்போல, கொலை சம்பவங்களும் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக கொலைகள் நடந்தது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், 2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. அதைப்போல, அதற்கு அடுத்த ஆண்டாள் 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன.

ஆனால், கடந்த 2024 ஆண்டில் தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.  தூத்துக்குடி சம்பவம், சாத்தான்குளம் சம்பவத்தை எல்லாம் பழனிசாமி மறந்துவிட்டார். அவரை மாதிரி ‘டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லும் ஆட்சி அல்ல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி” எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Published by
பால முருகன்

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

4 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

40 minutes ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

43 minutes ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago