புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் டிசம்பா் 31-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1 மணி வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடக்கலாம் இருக்க காவல்துறை பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், ஆகிய இடங்களுக்கு வரும் வாகனங்களை முறையாக சோதனை செய்யவேண்டும் . நுழைவு வாயில்கள் , நிகழ்ச்சி , விருந்து நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்த வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிக்காக நீச்சல் குளத்தின் அருகில் மேடை அமைக்கக் கூடாது.
நீச்சல் குளத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும் . வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த அனைத்து விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…