அதிமுக நிர்வாகியை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது சாத்துர் போலீசார் வழக்குப்பதிவு.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
முன்ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதிமுக நிர்வாகியை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது சாத்துர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செப்.24-ல் சாத்தூர் வந்தபோது அதிமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்களுக்கும், மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக சாத்தூர் போலீசார் ராஜேந்திர பாலாஜி உள்பட 10 பேர் மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனுவை, திருவில்லிபுத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…