சீண்டுவோர் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமரவைத்ததற்கு காட்டும் விசுவாசம் இதுதானா என்று நமது எம்.ஜி.ஆர் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.
அண்மையில் டெல்லியில் முதலமைச்சர் பழனிசாமி சசிகலா வருகை குறித்து கூறுகையில்,சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ள மாட்டோம் என்பதில் 100% உறுதியாக உள்ளோம். ஜெயலலிதா இருந்தபோது சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை .சசிகலாவுடன் இருந்தவர்கள் அதிமுகவில் இணைந்துவிட்டார்கள் என்று கூறினார்.இதனிடையே 2017 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இதற்கு இடையில் சசிகலா விடுதலையை தொடர்ந்து அதிமுகவை சார்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டி வரவேற்று வருகின்றனர்.இதனால் நெல்லை மற்றும் திருச்சியை சேர்ந்த நிர்வாகிகளை அதிமுக தலைமை நீக்கி உள்ளது.
இந்நிலையில் அமமுகவின் நாளேடான நமது எம்.ஜி.ஆர் வெளியிட்டுள்ள கட்டுரையில் ,சீண்டுவோர் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமரவைத்ததற்கு காட்டும் விசுவாசம் இதுதானா.பதவி வரும் வரை மண்டியிட்டு ,கை கட்டி ,சரணாகதி அடைந்து நின்றவர்கள் ,பதவி கிடைத்ததும் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் துரோகிகளுக்கு நாவடக்கம் செய்ய வேண்டும்.சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப் போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…