சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஏமாற்றி வருவதாகவும், வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக மக்களை ஏமாற்றி விட்டது எனவும் குற்றாடியுள்ளார்.

தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் அதிமுக சட்டப்போராட்டம் நடத்தி, கர்நாடகா தண்ணீரை தேக்கவும், தடுக்கவும் கூடாது என்று உச்சநீதிமன்றத்திடம் இருந்து தீர்ப்பை பெற்றுத் தந்தது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சசிகலா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது என தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றசாட்டி இருந்த நிலையில், இதற்கு பதில் கூறிய எடப்பாடி பழனிசாமி, தடுப்பூசிகள் அரசு வீணடிக்கப்படவில்லை என்றும் ஆரம்பத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசிகளின் வீணடிக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

36 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

1 hour ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

13 hours ago