ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில், மக்களிடையே பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதிமத சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சியம் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அதிசியம், அற்புதம் நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் குறிப்பாக, மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று ஹேஸ்டேக்-வுடன் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
unknown node